Wednesday, September 26, 2012

ஒரு நாள் மட்டுமாவது...



அன்புடன் ஒரு நிமிடம் 17.

ஒரு நாள் மட்டுமாவது...

ழை நேரம். மணி மகா பிசியான காலை எட்டரை. பையன் பரசு ஸ்கூலுக்கு போகணும். அப்பா வாசு ஆபீஸ் போகணும். அம்மா பரபரத்தாள் .

கார் ரிப்பேர். ஸ்டார்ட் ஆகலே! என்று தெரிவித்தார் வாசு. தினம் அவர்தான் அவனை ஸ்கூலில் விட்டுவிட்டு ஆபீஸ் போவார்.

ஐயையோ இப்ப எப்படி ஸ்கூல் போறது?’ அம்மாவிடமிருந்தும் மகனிடமிருந்தும் ஏக காலத்தில் குரல் வந்தது.

உதட்டைப் பிதுக்கினார்.

நல்ல ட்ரை பண்ணிப் பாருங்கப்பா. அல்ரெடி லேட்.

தெரிஞ்ச வித்தை எல்லாம் பண்ணிப் பார்த்துட்டேன். ஒண்ணும் பலிக்கலை.

அப்பா! கிட்டத்தட்ட அலறினான்.

எனக்கும் லேட் ஆகுது. Time I made my way to office! இப்ப என்ன பண்றது?”

நீங்க அவனை ஒரு ஆட்டோ பிடிச்சு ஸ்கூல்ல விட்டிட்டு...

இந்த மழையில இங்கே ஒரு ஆட்டோ காலியா வராது. நோ யூஸ்!

கால் டாக்சி?”

சொன்னா வர முக்கால் மணி நேரம் ஆகுமே?”

இப்ப என்ன...

ஒண்ணு செய்யலாம்.பரசு, குடையை எடுத்துக்க. பஸ்ல போயிடு.

பஸ்ஸா?”

நிறைய உன் பிரண்ட்ஸ் பஸ்லதானே போறாங்க? இன்னிக்கு ஒரு நாள் அவங்களோட ஜாய்ன் பண்ணிக்க!

அவன் பதிலுக்குக் காத்திராமல் புறப்பட்டார்.

ஆமாடா அட்ஜஸ்ட் பண்ணிக்க, வேறே வழியில்லை. என்றாள அம்மாவும் வேறே வழியின்றி, “ஷூவை கழற்றி செருப்பைப் போட்டுக்க. போட்டான்...

பாவம்! மழையில பஸ்ஸில...எப்படி போய் சேருவானோ?” தெருவையே பார்த்துக்கொண்டு அம்மா...

மாலையில் லேசாய் நனைந்து கொண்டு வந்த மகன் டியூஷனுக்கு சென்றான். ஏழு மணிக்கு வந்து டூல்ஸை எடுத்துக்கொண்டு காரருகில் சென்ற வாசுவிடம், “அதான் ஒழுங்கா ஸ்டார்ட் ஆகுதே, காலையில ஏன் அந்த பாவ்லா எல்லாம்?”

அதிர்ச்சியை மறைக்க ஒரு சிரிப்பை செலவிட்டார் வாசு.

மத்தியானம் என் தம்பி வந்திருந்தான். காரை பத்தி சொன்னேன். பார்த்துட்டு, தொட்டதுமே ஸ்டார்ட் ஆகுதே, என்ன பிரசினைன்னு கேட்டிட்டு போறான்.

சொன்னார், “வேணுமின்னுதான் அப்படி செஞ்சேன்.

வேணுமின்னுன்னா?”

நம்ம பையன் நாழைக்கு பிழைக்க வேணுமின்னுதான்! என்றார்,

நாமல்லாம் கஷ்டத்தோடு வளர்ந்தோம். பிரசினைகள் வந்தா சமாளிக்கறதுக்கு நல்லாவே பழகியிருக்கோம். நம்ம பசங்களுக்கு அந்த சக்தி கொஞ்சமாவது இருக்க வேண்டாமா? நாளைக்கு எத்தனையோ பிரசினைகள் வரலாம் இல்லையா? அதற்கான அனுபவங்களையும் கொடுக்க வேண்டியது நம்ம கடமை. அதான் அப்படி நடிச்சு அவனை மழையில பஸ்ஸில போக வெச்சேன். கொஞ்சம் கஷ்டப்பட்டிருப்பான் தான். ஆனால் தன்னால் முடியுதுங்கறதையும் தெரிஞ்சு கொண்டிருப்பான்!

அவருடைய எளிய விளக்கத்தில் அவள் முகத்தில் முகம் மலர்ந்தது.   

('அமுதம்' ஆகஸ்ட் 2012 இதழில் எழுதியது)
<<<>>>   

Saturday, September 22, 2012

மீட்சி



காற்றின் தூசு
மழையில் கரைந்து பின்
கண்ணில் தெரியும்
காட்சியே காட்சி!

னதின் சுமைகள்
மழலையின் சிரிப்பில்
மறைந்து பின்
அகத்தில் எழும்
ஆட்சியே ஆட்சி!

வாழ்வின் துயர்களை 
வந்தவருடன் பங்கிட்டு
வகையாய் எதிர்கொண்டபின்
மனதில் உயர்
மாட்சியே மாட்சி!

<<>>


Monday, September 17, 2012

அவர்களின் ப்ராஜெக்ட்கள்..



அன்புடன் ஒரு நிமிடம் -16

அவர்களின் ப்ராஜெக்ட்கள்..

சே! இவங்களை எப்படி திருத்தறதுன்னே தெரியலே! சலித்துக் கொண்டான் அபிஜித். கூப்பிடு தூரத்தில் தாத்தா.

என்ன விஷயம்? அவனாக சொல்லட்டும் என்று காத்திருந்தார்.  

கொஞ்ச நேரம் நடை பயின்றவன் அவர் கேட்கிற மாதிரி தோன்றாததால் தாத்தா, என்றழைத்து அந்த வாக்கியத்தை மறுபடி சொன்னான்.

வேறு வழியில்லை. விஷயத்தை சொல்லு, அவங்களை எப்படித் திருத்தறதுன்னு நான் சொல்லித் தர்றேன்,” என்றார் சாத்வீகன்.

ஸ்கூல்ல எனக்கு பிராஜெக்ட் வர்க் கொடுத்திருக்காங்க. நம்ம வீட்டில யாருமே எனக்கு உதவ மாட்டேங்கறாங்க!

த்சொ, த்சொ...என்றார்

ஆமா. யாருமே! ஒரு ப்ராஜெக்ட்னா என்னன்னு... அதோட வேல்யூவே  அவங்களுக்கு தெரியலே.

சரி, நீ சொல்லு. ப்ராஜெக்ட்னா என்னா?”

உங்களுக்குத் தெரியாதாக்கும்?”

எனக்கென்னப்பா தெரியும்? நான் படிக்கிற காலத்திலே ஹோம்வர்க் தான் உண்டு. இது ஏதோ புது விஷயம், நல்ல விஷயம் போல இருக்கு. இப்படியெல்லாம் கிடையாது அப்ப..

அவன் இன்ட்ரஸ்டிங்காக உட்கார்ந்தான். பிராஜெக்ட் அப்படீன்னா தீர்வு காண வேண்டிய ஒரு பிரசினை அல்லது நிறைவேற்ற வேண்டிய நோக்கம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டியது. அதை செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டியது. அப்புறம் அதை ஸ்டெப் பை ஸ்டெப்பாக அடுக்கிக்கொண்டு செய்து முடிக்க வேண்டியது... இப்படி சொல்லலாம்

, இதான் அதுவா? எல்லா விஷயத்துக்குமே பொருந்தற மாதிரி இருக்கே?”

ஆமா. நம்மை சுத்தி இருக்கிற எதையுமே இப்படித் சரி செய்யலாம். இன் ஃபாக்ட் இந்த மாதிரி பிராஜெக்ட் நாங்க செய்ய செய்ய எங்களுக்கு அந்தத் திறமை வரும், வளருமாக்கும்!

புரியுது. யு ரிக்வைர் எ நம்பர் அஃப் தெம். ஆனா ஸ்கூல்ல கொடுத்த ஒன்றுக்குக் கூட இவங்க உதவ மாட்டேங்கறாங்க, இல்லையா?”

எக்ஸாட்லி.

எனக்கொரு சந்தேகம்.

தாத்தா?”

போன வாரம் உங்கப்பாம்மா இந்த பழைய வீட்டில வாஷிங் மெஷின்லேயிருந்து இண்டக்ஷன் ஸ்டவ் வரைக்கும் மாடர்ன் காட்ஜட்ஸ் எதையும் சரியா பிளேஸ் பண்ண முடியலே, எப்படி இதை மாடிஃபை பண்றதுன்னு மண்டையை உடைச்சிட்டிருந்தாங்களே, அதை எடுத்துக்கிட்டா அது கூட ஒரு ப்ராஜெக்ட் தான் இல்லையா?”

நிச்சயமா.”

ஏன், நம்ம வீட்டில் முன்னாலிருக்கிற பத்துக்குப் பத்து ஏரியாவில ஒரு குட்டித் தோட்டம் அமைக்க முடிஞ்சா காய்கறிச்செடிகளை இயற்கை உரம் போட்டு நல்லபடியா வளர்க்கலாம்கிறதும்...

ஒரு ப்ராஜெக்ட் தான்.

அப்புறம் இந்த எலிகளோட உபத்திரவத்தை போக்க மட்டும் ஒரு வழி கிடைச்சுட்டா?”

அது கூட ஒண்ணு தான்!

அப்படீன்னா இதில எதையாவது ஒண்ணையோ, இல்லை ரெண்டையோ எடுத்து அதை நீ பண்ணினா உனக்கு ப்ராஜெக்ட் அனுபவமும் கிடைக்கும், நம்ம வீட்டில சில பிரசினையும் தீரும் இல்லையா?”

ஆமா, நல்ல ஐடியா நீங்க சொல்றது!

அட்லீஸ்ட் அந்த ப்ராஜெக்டை எல்லாம் செய்திட்டிருக்கிற அவங்க, நீ அதுக்கு உதவலேன்னு கம்ப்ளெய்ண்ட் பண்ணாம இருக்கிறாங்களே, அதுவே பெரிய உதவிதானே உன் ப்ராஜெக்டை முடிக்கிறதிலே?”

அவன் உற்சாகமாக எழுந்தான். இதை முடிச்சிட்டு அதில உதவப் போறேன் தாத்தா!

குட் லக் சொல்வதற்குள் ஆளைக் காணோம்!

('அமுதம்' ஆகஸ்ட் 2012 இதழில்)

<<>>


Tuesday, September 11, 2012

வசதி


டுத்து வைத்த சாவி அதற்குள்  

எங்கே மறைந்து போனது?

மனசில் உதித்த கவிதை வரி

மாயமாகிப் போனது.

அடுத்த நிமிடமே எதுவும் 

அப்படியே மறந்து போகுது.

வயதானதால் வரும் மறதி

வந்து தினம் விளையாடுது.

அதிலும் சௌகர்யம் இருக்குது 

அடிக்கடி எழும் கவலைகளும் 

அடுத்த நொடி மறந்து போகுது.

<<<>>>

(படம்: நன்றி, கூகுள்)


Tuesday, September 4, 2012

கிடைக்காமல் இருக்காது...



அன்புடன் ஒரு நிமிடம் - 15

கிடைக்காமல் இருக்காது...

ஹா, இதுவரை மூணு பேர் மண்டையை உடைச்சு யோசிச்சுப் பார்த்திட்டாங்க. முடியலே ஒரு விளக்கத்தைக் கண்டுபிடிக்க, அவங்களால! என்றான் கிஷோர்.

மூணு பேராலேயும்னா ஆச்சரியம்தான்.”

இப்ப நீங்க கேட்ட இதே கேள்வியைத்தான் அவங்களும் கேட்டாங்க. நீங்களே யோசித்து ஏன்னு காரணத்தைக் கண்டுபிடியுங்களேன்னேன். Were not able to. அவங்களால முடியலே. அத்தனைக்கத்தனை நல்லதுதான்னு நானும் சொல்லாமலே விட்டுட்டேன்.

ராகவ் தலையை சொறிந்துகொண்டார். இவன் தத்துபித்துன்னு ஏதோ பண்ணி வெச்சிட்டு அதுக்கு நம்மை காரணம் கண்டுபிடிக்க சொல்றானே?
ஊகித்த கிஷோர், பி.எஸ்.வீரப்பா போல சிரித்தான். கேட்டது நீங்க தானே?”

உண்மைதான். என்னமோ ஏகப்பட்ட பணம் கொடுத்து ஒரு ஆடியோ சிஸ்டம் வாங்கி செட் பண்ணியிருக்கியாமே உன் அறையில? நான் இன்னும் பார்க்கவே இல்லையே?” என்று கேட்டது அவர்தான்.

வாங்க, இப்பவே பார்த்துடலாம்,” கையோடு அழைத்துப் போய்விட்டான்.

கேட்க திவ்யமாக இருந்தது. தேனாக ஒலித்தன பாடல்கள். அறையின் நடுவே இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து கேட்டபோது நெருடல் ஒன்று எழுந்தது. வலது பக்கம் வால்யூம் அதிகமாக வெளிப்பட்டது ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. ஓ, இடது புறமிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் வலதை விடவும் சற்றே தள்ளியிருந்த மாதிரி... மாதிரி என்ன, தள்ளித்தான் இருந்தது.

ஏண்டா இப்படி? சரியா அளந்து பார்த்து ஃபிக்ஸ் பண்ணலியா? அல்லது சோபா தான் இடம் மாறிவிட்டதா?”

அதெல்லாமில்லை. டெலிப்ரேட்டா பண்ணினதுதான் அது. அப்படி செய்ய எனக்கே எனக்குன்னு உள்ள அந்தக் காரணத்தை ஊகிக்க முடியுமா உங்களால?”

ஊகித்ததில் மண்டை காய்ந்ததுதான் மிச்சம். ஒவ்வொன்றாக சொல்ல எல்லாமே தவறென்றான். உள்ளே இருக்கும் ஸ்பீக்கரின் கான்ஃபிக்ரேஷனில் உள்ள வித்தியாச சாத்தியதை வரை யோசித்துப் பார்த்துவிட்டார்.

நீயே சொல்லிடேன்.

தயங்கினான். அப்புறம் மெல்ல சொன்னான். அது வந்து.. ஒரு காது எனக்கு சரியா கேக்கறதில்லே. அதனால இந்த ஸ்பீக்கர்களை சரியா பிளேஸ் செஞ்சா எனக்கு ஸ்டீரியோ எஃபக்ட் கரெக்டா கிடைக்கலே. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன். இப்படி வலது ஸ்பீக்கரை டிரயல் அன் எரர் பண்ணிப் பார்த்து என் சோபாவை வலது பக்கம் ஒன்றரையடி தள்ளி வைத்துக் கொண்டேன். எப்படி என் ஐடியா?”

ராகவ் பதிலே சொல்லவில்லை. என்ன மாமா யோசனையில ஆழ்ந்துட்டீங்க?”

ஒண்ணுமில்ல... ஒண்ணு தோணிச்சு எனக்கு

விழித்தன அவன் கண்கள்.

அவர் சொன்னார். அதாவது வெளியிலிருந்து ஒரு நல்ல கருத்தை நாம பெறும்போது அது சரியானதுன்னு அறிவுக்குப் பட்டாலும் கூட பல சமயம் அதை முழுமையா ஏத்துக்க நம்மால முடியாது போகுது இல்லையா? அதுக்குக் காரணம் நம்ம மனசிலிருக்கும் விருப்பமும் - அதை வலது காதுன்னு வெச்சுக்க, நம்ம பொறுப்புணர்வும் - அதை இடது காதுன்னு வெச்சுக்க, ரெண்டும் பாலன்ஸ் சரியில்லாம இருக்கலாம் இல்லையா? அதை உணர்ந்து கொண்டு வலது காதான பொறுப்புணர்வை கொஞ்சம் அதுக்குக் கிட்டத்தில வெச்சுக்கிட்டா, அதாவது அதிகப் படுத்திக் கொண்டால் அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட நம்மால முடியும் இல்லையா? அதைத்தான் யோசிச்சிட்டிருந்தேன்.

என் காதை, ஸாரி, கண்ணைத் திறந்திட்டீங்க மாமா!

('அமுதம்' ஆகஸ்ட் 2012 இதழ்)

<<<>>>