Monday, May 13, 2013

உருப்படியான விஷயம்...



அன்புடன் ஒரு நிமிடம் - 33

உருப்படியான விஷயம்...

ந்த விஷயத்துக்காக மாமா அத்தனை அலட்டி, தன்னையும் விரட்டி உடனடியாக போய் அறிவுரை சொல்லத் தொடங்கினரோ அந்த விஷயத்தை அவரே இப்படி கைகழுவுவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை கிஷோர். சே, சொதப்பிட்டாரே!

சாயங்காலம் கிஷோர் வந்து, மாமா, நம்ம மகேஷ் அவங்கப்பாவை முதியோர் இல்லத்தில கொண்டு போய் சேர்க்க எல்லா ஏற்பாடு பண்ணிட்டான்! என்று சொன்னதும் அவர் பதைபதைத்ததைப் பார்க்க வேண்டுமே? கையிலிருந்த கண்ணாடித் டம்ளரை நழுவ விட்டு... 'ஓ, மை!' என்றொரு அலறல் இட்டு... சேர்த்திட்டானா?”

இன்னும் இல்லை. நாளைக்கு...

கிளம்பு, கிளம்பு, உடனே அவனைப் பார்த்து எடுத்து சொல்லி அப்படி செய்துடாம தடுக்கணும்!

யெஸ், நானும் அவனைப் பார்த்துப் பேசி அவன் மனசை மாத்தணும்னுதான் உங்களிடம் விஷயத்தை சொல்லி உங்களையும் அழைச்சிட்டுப் போக வந்தேனாக்கும்!

அதற்குள் அவர் காரை ஸ்டார்ட் பண்ணியிருந்தார்.

போன இடத்திலும், வாங்க, உட்காருங்க, பிரேமா, ஸ்னாக்ஸ் எடுத்திட்டு வா! எத்தனை நாளாச்சு உங்களைப் பார்த்து! என்றவனை மேற்கொண்டு ஒரு வார்த்தை பேச விடவில்லை.

அப்பா விஷயமா நீ ஏதோ முடிவெடுத்திருக்கேன்னு கேள்விப்பட்டேன் அதான் ஓடிவந்தேன். நான் சொல்லப் போறதைக் கொஞ்சம்கவனி... கிடு கிடுவென்று ஆரம்பித்தார்.

அதற்குள் பிரேமா பிளேட் நிறைய காரா பூந்தி கொண்டு வந்து வைத்தாள்.

அவர் ஒவ்வொரு பாயிண்டாக அழுத்தமாக சொல்ல ஆரம்பிக்க கிஷோரும் கூடவே தன்னுடையவற்றை எடுத்து இயம்பலானான். மகேஷ் இவர்கள் சொன்னதை கேட்டு மௌனமாக தலையசைத்துக் கொண்டிருந்தான். 

நாலைந்து நிமிஷம் போயிருக்கும். மாமா பேச்சை குறைத்துவிட்டு, கிட்டத்தட்ட நிறுத்திவிட்டு சுவாரசியமாக காரா பூந்தியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் ரசித்து மென்று தின்பதைப் பார்த்து இவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. காட்டிய ஜாடையையோ விட்ட முறைப்பையோ அவர் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

அதோடு ரசித்து ரசித்து சாப்பிட்ட விதம் இருக்கிறதே... பல்லைக் கடித்துக் கொண்டு கிஷோர் தனக்குத் தோன்றிய அறிவுரைகளைத் தொடர்ந்தான், நச், நச்சென்று அடுக்க ஆரம்பித்தவர் சைலண்டாக ரிட்ரீட் ஆகிவிட்ட எரிச்சலை விழுங்கிவிட்டு! (‘வீட்டுக்கு வரட்டும், பேசிக்கிறேன்!’)

அவர் பேச்சை நிறுத்தியதை விட அந்த காரா பூந்தியை சுவையாக மென்று தின்றதை அவனால் சற்றேனும் ஜீரணிக்க முடியவில்லை.

இவன் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு மகேஷ், சரி, நான் நீங்க சொல்றதை யோசிச்சிட்டு என் முடிவை எடுக்கிறேன். என்று முடித்தபோது, மாமா தன் கவனத்தை காபியிலிருந்து அப்போதுதான் எடுத்திருந்தார்.

ன் அப்படி சொதப்பிட்டீங்க மாமா? காரா பூந்தியைக் கண்டதே இல்லையாக்கும்? சே! படபடவென்று பொரிந்து தள்ளினான், வீட்டுக்கு வந்ததும் வராததுமாய்.

பொறுமையாக அவன் திட்டை வாங்கிக் கொண்டார். அதிருக்கட்டும், உன்னை ஒண்ணு கேட்கணும். நாளைக்கு காலையில் நீ உன் ஆபீசுக்கு போகும்போது உனக்கென அங்கே ரெண்டு வேலைகள் காத்திருக்குன்னு வெச்சுக்க. ஒண்ணு நீ எத்தனை சிரமப் பட்டாலும் பலன் எதுவும் நேராத ரகம். மற்றொன்று உருப்படியா நடக்கிற ஒரு வேலை. நீ எதை தேர்ந்தெடுப்பே?”

ரெண்டாவதைத்தான். சரி அதற்கும் இதற்கும்...?”

சம்பந்தம் இருக்கு. நானும் அதைத்தான் இங்கே செய்தேன். மகேஷ்கிட்ட கொஞ்சம் பேசின உடனேயே நீ கவனிச்சியோ என்னவோ நான் கவனிச்சேன் அவன் காதுக்குள்ளே ஒரு அட்சரம் கூட நுழையலை. ஒப்புக்கு தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தான்....

நானும் கவனிச்சேன். ஆனா எதிர்த்து எதுவுமே சொல்லலியே அவன்?”

எதிர்த்து ஏதாவது கேட்டால், அட, நம்மை மடக்க முயன்றால் கூட அவன் கொஞ்சமாவது யோசிக்கிறான்னு அர்த்தம். அதான் நான் நிறுத்திட்டேன்.

கிஷோர் யோசித்தான்.

என்ன யோசிக்கிறே?”

மிச்சம் வைத்து விட்ட காரா பூந்தியைத்தான்!

(அமுதம் பெப்ருவரி 2013 இதழில் வெளியானது)

 <<>>

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... இதற்கு மேல் பேசியும் பிரயோசனமில்லை என்று கிஷோருக்கு புரிந்து விட்டது...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கிஷோர் யோசித்தான்.

“என்ன யோசிக்கிறே?”

“மிச்சம் வைத்து விட்ட காரா பூந்தியைத்தான்!”//

எல்லோரையும் எல்லா நேரங்களிலும் நம் பேச்சினால் மாற்றிவிட முடியாது தான். கிடைத்தவரை காராபூந்தி இலாபம் என்று மேற்கொண்டு பேசாமல் இருந்துள்ளார்.

நல்ல படைப்பு. பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

எதிர்த்து ஏதாவது கேட்டால்,அட, நம்மை மடக்க முயன்றால் கூட அவன் கொஞ்சமாவது யோசிக்கிறான்னு அர்த்தம். அதான் நான் நிறுத்திட்டேன்.”

உருப்படியான விஷயம்...பாராட்டுக்கள்..

கோமதி அரசு said...

உனக்கென அங்கே ரெண்டு வேலைகள் காத்திருக்குன்னு வெச்சுக்க. ஒண்ணு நீ எத்தனை சிரமப் பட்டாலும் பலன் எதுவும் நேராத ரகம். மற்றொன்று உருப்படியா நடக்கிற ஒரு வேலை. நீ எதை தேர்ந்தெடுப்பே?”//

மாமா உருப்படியாக நடக்கிற ஒரு வேலையை தேர்ந்து எடுத்தது சரிதான்.( காராபூந்தியை தேர்ந்து எடுத்தது சரி தான்.)

இவ்வளவு நாட்களாய் மாமாஎல்லாவற்றயும் சுபமாய் முடிப்பதை படித்து விட்டு மாமாவால் முடியாத ஒன்றும் இருக்கும் என்றால் கஷ்டமாய் இருக்கிறது.

உஷா அன்பரசு said...

பேசி பிரயோஜனமில்லாதவங்க கிட்ட பேசி நேரத்தை வீணடிக்கிறதை விட பட்டு திருந்தட்டும்னு விட்டுடறதே பெட்டர்...
மிக்ஸர் நல்லாருக்கே...!

உஷா அன்பரசு said...

உருப்படியாய் ஒரு ஓட்டும்..
த.ம-2

ரிஷபன் said...

எப்போதும் எல்லாமே முடியும் என்றில்லை.. ஆனால் அதற்காக நம் முயற்சி கைவிடக் கூடாது என்கிற படிப்பினை இக்கதையில்.. அழகாய்.

ராமலக்ஷ்மி said...

மாற்ற இயலா மனித ரகம். சரியாகதான் எடை போட்டிருக்கிறார். நல்ல கதை.

நிலாமகள் said...

நல்ல லாஜிக்:)

ஒருவேளை முடிவெடுத்த பின் போனதால் மாமா பேச்சு எடுபடாமல் போனதோ...

கரந்தை ஜெயக்குமார் said...

சுயநலப் பேய்களிடம், பேச்சு எடுபடாது

Mahi said...

ஒரு விஷயத்தை தீர்மானித்துவிட்டு மற்றவர் சொல்வதை பேருக்கு கேட்பவர்களுக்கு புத்தி சொல்லி பிரயோஜனமில்லை என்பதை அழகாக சொல்லிட்டீங்க. நல்ல பகிர்வு!

பி.கு. என்னோட மிக்ஸர் படத்தை இங்கே பார்க்க சந்தோஷமா இருக்குங்க. காராபூந்தி படமுமே கூட இருக்கே..அதைப் பார்க்கலையா நீங்க? :)

கவியாழி said...

காராபூந்தியை சாப்பிடவில்லை.அவன் மனதை அறிந்ததால் வேறு வழியின்றி சாபிடவேண்டியதாயிட்று

Anonymous said...

avargalay pattu thirunthattum..avarum orunal appavaga maruvar..nalla kathai..

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!