Thursday, September 3, 2015

நல்லதா நாலு வார்த்தை... 53

’ஒரு புன்னகை என்பது
உலகளாவிய நல்வரவு.’
- Max Eastman
('A smile is the universal welcome.')
<>

'எடுத்துக் கொள்வது எது என்பதல்ல 
விட்டு விடுவது எது என்பதே 
நம்மை செல்வராக்குகிறது.'
- Henry Ward Beecher
('It is not what we take up,
but what we give up,
that makes us rich.')
<>

’ஒரே ஒரு புன்னகை மட்டுமே
உன்னிடம் இருக்குமென்றால்
அதை நீ நேசிப்பவர்களுக்கு அளி.'
- Maya Angelou
('If you have only one smile in you,
give it to the people you love.')
<>

'நேற்றைய தினம் அளவுக்கு ஒரு 
தொலைவு இவ்வுலகில் இல்லை.'
- Robert Nathan
('There is no distance on this earth 
as far away as yesterday.')
<>

’பறவை பாடுவது அதனிடம் ஒரு 
பதில் இருக்கிறதென்பதால் அல்ல,
அதனிடம் ஒரு 
பாட்டு இருக்கிறதென்பதால்.’
- Maya Angelou
('A bird doesn't sing because it has an answer,
it sings because it has a song.')
<>

'நம் மாபெரும் ஏமாற்றங்களுக்குப் பின்னரே
நம் மிகப்பெரும் வெற்றிகள் 
வருகின்றன பெரும்பாலும்.'
- Henry Ward Beecher
('Our best successes often come after
our greatest disappointments.')
<>

’இஷ்டப்படும் மனிதர்களால் ஆனது
இவ்வுலகம்; 
சிலர் வேலை செய்வதற்கு 
இஷ்டப்படுகிறார்கள்,
ஏனையோர் அவர்களை 
வேலை செய்யவிடுவதற்கு
இஷ்டப்படுகிறார்கள்.’
- Robert Frost
('The world is full of willing people;
some willing to work, the rest willing to let them.')

><><><

(படம்- நன்றி:கூகிள்)

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எடுத்துக் கொள்வது எது என்பதல்ல
விட்டு விடுவது எது என்பதே
நம்மை செல்வராக்குகிறது.'

ஆகா அருமை
தம 2

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை.

/’பறவை பாடுவது அதனிடம் ஒரு
பதில் இருக்கிறதென்பதால் அல்ல,
அதனிடம் ஒரு
பாட்டு இருக்கிறதென்பதால்.’/

பிடித்தமான வரிகள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!