Wednesday, October 28, 2015

அவள் - (கவிதைகள்)


190
ஆயிரம் கவிதை எழுதிவிட்டால்
அரை சதவிகிதம் உன்னைப்
அறிந்துகொண்டுவிட்டேன் என்று
அர்த்தம்.
><><

191.
ஒவ்வொரு வினாடியும்
உணரும் உன் மனதை
தீட்ட முயலுகிறேன் ஓர்
ஓவியமாக.
><><

192.
எட்டிப் பார்த்துவிட்டு உன்னை
என் கவிதை சொன்னது,
ஊஹூம், என்னால் முடியாது
சரியாக வர்ணிக்க.
><><

193.
எத்தனை தூரமிருந்தாலும்
எனக்கு நீ தெரிவது
க்ளோசப்பில்.
><><

194.
வரைய முயலுகிறேன்
உன் மனதை...
அத்தனை அழகை
கான்வாஸில் வடிக்க
என் தூரிகையால்
முடியவில்லை.
><><

195.
கண்டதும் உன்னை
கையும் ஓடலை
காலும் ஓடலை
கவிதையும் ஓடலை.
><><

196.
தேவையே இல்லை
உன்னோடான வாழ்க்கையில்
எடிட்டிங்.
><><><

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வர்ணனை, க்ளோசப் ரசித்தேன்...

கவிதையும் ஓடலை டாப்...!

Nagendra Bharathi said...

அருமை

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
தம +1

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கவிதைகள்! நன்றி!

Nagendra Bharathi said...

அருமை

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!