Tuesday, December 29, 2015

அவள் - கவிதைகள்...


218
அசட்டுப் பட்டம் 
வாங்கிட ஆசை
உன்னிடமிருந்து.

219.
அநீதி நீ செய்வது,
நாலு முறை மட்டுமே பேசுவது
ஒரு நாளில் என்றால்?

220
ஏங்குகிறேன் நான்
எதையும் ரசித்திடும் உன் மனம்
எனக்கும் வேண்டுமென்று.


221
உன்னை சந்தித்ததும்
இனிப்பை விட்டுவிட்டேன்
வாழ்வில் எதற்கு 
இரண்டு இனிப்பு?

222
விழைகின்றேன் 
எப்போதும் நானிருக்க, உன்
விழி நோக்கும் இடத்தில்.


223
எனக்கென்று என்ன இருக்கிறது உன்
இதயத்தைத் தவிர? 
ஆனால் அதுவே
எல்லாமுமாக இருக்கிறது.

224
ஒரு கணம் எனினும்
உன் முகப் புன்னகை
எடுத்துச் சென்று விடுகிறது
என்னைத் தன்னுடன்.

><><><

2 comments:

Unknown said...

நன்று!

கரந்தை ஜெயக்குமார் said...

உன்னை சந்தித்ததும்
இனிப்பை விட்டுவிட்டேன்
வாழ்வில் எதற்கு
இரண்டு இனிப்பு?

அருமை
அருமை

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!