Tuesday, January 3, 2017

அவள் - கவிதைகள்

361.
நிறைவையும் ரசனையையும் நாம்
பங்கிட்டுக் கொண்டதில்
நிறையாமல் போனது நம் ரசனைகள்.

362.
எழிலும் நளினமும் 
இழைந்தால் 
நீ.

363
என்றோ நீ சொன்ன பார்க்கலாம்கள்..
இன்னும் காத்துக்கொண்டு நான்..

364.
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
எடுத்து வந்தேன் உன் இதயத்தை 
உனக்கே தெரியாமல்.

365.
இரவானால் போதும் 
உன்னிடம் பேச வந்து விடுகின்றன 
நட்சத்திரங்கள்.

366.
நீ பார்த்த நானை
பார்க்க முடியாது இன்று,
மாற்றிவிட்டாய் அழகாக.
நான் பார்த்த நீயை
பார்க்க முடியும் இன்றும்,
அப்படியே அழகாக.

367.
நீ போட்ட கோலத்தைத்
தாமும் போட முயலுகின்றன
நட்சத்திரங்கள்.

368.
எல்லா கதவுகளும் அடைத்திருந்தாலும் உன்
இதயக் கதவு
திறந்திருந்தால் போதும்.

369.
இரண்டு நான்கள்..
உன்னை சந்திப்பதற்கு முன்.
உ. ச. பி.

370.
வராமலேயே அழைத்து செல்கிறாய்
நீ போகுமிடத்துக்கெல்லாம்.

><><><

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை. தொடர்கிறேன்.

”தளிர் சுரேஷ்” said...

குறுங்கவிதைகள் அருமை! வாழ்த்துக்கள் !

சிகரம் பாரதி said...

ஹைக்கூ கவிதைகள் அருமை. சிறப்பு. நமது வலைத்தளம் : சிகரம்

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!