Tuesday, June 20, 2017

அவள்... (கவிதைகள்)


411.
கானகத்து மரங்கள் இருளைப்
பொத்தி வைத்திருப்பது போல
மனதில் வைத்திருக்கிறேன் உன்னை.
><><

412
தேடப் பிடிக்கிறது எனக்கு
தேடவைக்கப் பிடிக்கிறது உனக்கு.
><><

413.
மாயச்சிரிப்பு...
எனக்கு மட்டுமாக
நீ சிரிப்பது.
><><

414.
இரு கரைகளையும்
இணைக்கிறது பாலம் நம்
இரு மனங்களையும் 
இணைக்கிறது காலம்.
><><

415.
உன் நினவலைகளினின்றும் 
கரையேற முடியாமல்
கவிதையேறிற்று மனம்.
><><

416.
வேறொன்றும் வேண்டாமென
மனசு சொல்லவே
அருகில் நீ.
><><

417.
கடைக்கண் தாவும் விழி
கடப்பது நாளில் பத்து கி.மீ.
><><

418.
எப்படி இலைகள் சரியாக அசைந்தாடி
உன்னை வரவேற்கின்றன
பூங்காவில் நீ நுழைகையில்?
><><

 419.
விரைந்து சென்றுவிட்டாய்
வியந்து நிற்கவைத்துவிட்டு.
><><

420.
என் எண்ண நதியலைகள்
சங்கமிக்கிறது உன்
இதயக் கடலில்.

><><><

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தேடப் பிடிக்கிறது எனக்கு
தேடவைக்கப் பிடிக்கிறது உனக்கு

அருமை
அருமை

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!