Friday, January 12, 2018

நல்லதா நாலு வார்த்தை... 85


’அவற்றை அடைவதற்குமுன் நீ தாண்டும் பாலங்கள் 
அமைந்திருப்பது அங்கே இல்லாத ஆறுகளின் மீது.’
-Gene Brown
('The bridges that you cross before you come to them 
are over rivers that aren't there.')


'தன் உறுதிக்குப் பின்னால் கனிவுள்ள ஒரு தந்தையும்
தன் கனிவுக்குப் பின்னால் உறுதியுள்ள ஒரு தாயுமே 
சிறப்பாக இணைந்த பெற்றோர்.’
- Sydney Harris
(’The best combination of parents consists of a father
who is gentle beneath his firmness and a mother
who is firm beneath her gentleness.’)


'மற்றவர்கள் மீது நாம் 
எரிச்சலடையும் ஒவ்வொரு விஷயமும்
நம்மைப் புரிந்துகொள்ளுதலுக்கு வழி வகுக்கும்.’
-Carl Jung
(’Everything that irritates us about others
can lead us to an understanding of ourselves.’)


'மகிழ்வான நினைவுகளில் திடமாக
மனம் ஒன்றுவதைப் போல்
மகிழ்வற்ற நினைவுகளை 
மாற்றுவதொன்றில்.'
- Dr. Hans Selye
('Nothing erases unpleasant thoughts more
effectively than conscious concentration on pleasant ones.')


'பேசிப்பேசித்தான் கற்றுக் கொள்கிறாய் பேச, 
படித்துப் படித்துத்தான் படிக்க, ஓடி ஓடித்தான் ஓட, 
உழைத்து உழைத்துத்தான் உழைக்க; அது போலவே 
நேசித்து நேசித்தே கற்றுக்கொள்கிறாய் நேசிக்க.' 
-Anatole France
('You learn to speak by speaking, to study by studying,
to run by running, to work by working; in just the same,
you learn to love by loving.')


'எல்லாம் அன்பே, அது 
எல்லாம் கொடுக்கிறது, 
எல்லாம் எடுக்கிறது.'
- Soren Kierkegaard
('Love is all, it gives all, and it takes all.')


'சூழ்நிலைக்கு உதவுமுகமாய் 
சொல்லுங்கள், செய்யுங்கள் ஏதேனும்;
குறை சொல்வதற்கு வேண்டியதில்லை புத்தி.'
- Robert A. Cook
('Say and do something positive that will help
the situation; it doesn't take any brains to complain.')


'வாழ்க்கைக்கென்றே உண்டு அதன் 
மறைந்திருக்கும் வலிமைகள்;
வாழ்ந்தே அவற்றை நாம் 
கண்டறிய முடியும்.’
- Soren Kierkegaard
('Life has its own hidden forces which
you can only discover by living.')


’ஊகிக்க முடிகிறதாகவே வாழ்க்கை இருந்தால் பின்
அது வாழ்க்கையாக இருக்காது;
அதில் சுவையும் இருக்காது.’
- Eleanor Roosevet
('If life were predictable it would cease to be life,
and be without flavour.')


’முயலும் மனிதருடன் 
முயலுகிறார் கடவுள்
தானும் இணைந்து எப்போதும்.’
- Aeschylus
(’God always strives together with those who strive.’

>>>><<<<<

Saturday, January 6, 2018

அவள் - கவிதைகள்...



441.
ரொம்ப ஒன்றுமில்லை, சில
யுகங்களே கேட்கிறேன்
நம் பந்தம் தொடர.

><><

442
நீ
சென்றபின்
நகர்கிறது
நின்ற நேரம்.
><><

443
எல்லா நட்சத்திரங்களும்
ஜொலிப்பதில்லை நான் என்
நட்சத்திரத்தைப் பார்க்கும்போது.
><><

444
4 4 4 -இல் தெரிகின்ற
வரிசையாக செல்லும் படகுகள்போல என்
வரிகள் உன் பின்னால்.
><><

445
என் மெட்டுக்குக் கிடைத்த
மிகச் சிறந்த பல்லவி.
><><

446.
உன் புன்னகையிலிருந்து என் 
உள்ளத்துக்குத் தாவுகிறது ஒரு 
பரவச மின் அலை.
><><

447.
நீ தொட்டுத் துலங்கியவற்றின்
பட்டியலில் நானும்.
><><

448.
வசந்தம் வந்தது வாழ்வில்...
மாறுவேடத்தில்!
><><

449.
முகிழ்த்துக் கொண்டேயிருக்கும்
உன் மனப் பரவசம்
தொற்றிக் கொள்கிறது தினம்
எனை ஒரு சிறிதேனும்.
><><

450.
வாழ்வில் நீ
வந்தாய்,
வாழ்வு நீயானது.
><><

Thursday, January 4, 2018

தானே யோசிக்க... (நிமிடக்கதை)

ரிலாக்ஸ், ரிலாக்ஸ் என்றார் சாத்வீகன். வந்தவளோ அமைதியாவதாகக் காணோம்.
"என் பொண்ணு ஏதோ ஒரு உதவாக்கரைப் பையனை லவ் பண்றா மாமா. எப்படி அவளை தடுக்கறது... எப்படி எப்படி..."
"தடுக்க வேண்டிய அவசியமே இல்லை." என்றார் இவர். "சொல்லு, என்ன நடக்கிறது?..."
அழுது கொண்டே விவரித்தாள் சாவித்திரி.
எல்லாம் கேட்டு விட்டு அவர் சொன்ன வழி?
”இப்ப நீ என்ன பண்றே.. அவகிட்டபோய் லவ் பண்ண சொல்லப்போறே..."
"என்ன இப்படி சொல்றீங்க?"
"சில சமயம் பிரசினைக்குள்ளேயே தீர்வு இருக்கும் இல்லையா?" சிரித்தார்.

றுநாள்.
மகளைக் கூப்பிட்டு கவலையோடு பேசினாள் இவள். "ஆமா. அந்த சுரேஷுக்குத்தான் உன்னைக் கொடுக்கணும்னு பிடிவாதமா இருக்கார் உங்கப்பா. அவர் தங்கையைக் கொடுத்த இடத்திலேர்ந்து வந்த வரன். அதனால அவருக்கு தலைகால் புரியலே.  அவளோட மதிப்பு அங்கே நல்லாயிருக்குமாம். உறவும் பலப்படுமாம்.  கேட்டதிலேரந்து  தூக்கம் போச்சு. அந்தப் பையனுக்கு சரியான படிப்பும் இல்லே. வேலையும் ஏதோ டெம்பரரியா ஒரு சிமண்டு கம்பெனியில... இத பாரும்மா, அப்பா இப்பத்திய சௌகரியங்களையும் பையன் அழகையும் பார்க்கிறாரு. ஆனா நாளைக்கு? உனக்கு குழந்தைங்க பிறந்து அதுகள் நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கணும், தரமான பள்ளியில படிக்கணும்... உன் ப்ரண்ட்ஸ் உன்னைப் பார்த்து பரிதாபப்படக் கூடாதில்லையா?"
அவள் ஏதோ யோசனையில் ஆழ்ந்த மாதிரி...
"நான் என்ன சொல்லியும் அவர் கேட்கற மாதிரி இல்லை. அவரை எதிர்த்து நான் ஒண்ணும் செய்ய முடியாது. வேறே வழியில்லே. அதிலேர்ந்து தப்பணும்னா நீ லவ் மேரேஜ் பண்றதுதான் ஒரே வழி.”
“என்னம்மா சொல்றே? நிஜமாவா?”  
”நீ புத்திசாலிடி. ஒரு ஸ்கூட்டி வாங்கறதானா கூட அதோட தரத்தை நல்ல அலசிப் பார்த்துத்தானே வாங்குவே? நிச்சயமா நீ தேர்ந்தெடுக்கிற பையன் நல்ல வேலை, ரொம்பவே  திறமை உள்ளவனா உன்னோடவும் அவனோடவும் உங்கள் குழந்தை களோடவும் எதிர்காலம் முழுக்க சிறப்பா விளங்கிற மாதிரி சகல தகுதியும் உள்ளவனாகத்தான் இருப்பான். எனக்கு நம்பிக்கை இருக்கு."
"என்னம்மா.. நீ.. என்கிட்ட போய் இப்படி சொல்லிட்டு.....நான் இப்ப யாரயும் லவ் .... " இழுத்தாள்.
டுத்த வாரம் சாத்வீகனிடம் நன்றி சொன்னாள் சாவித்திரி.
"நேத்திக்கு பொண்ணு வந்து சொல்லிட்டா. அவளால அப்படியெல்லாம் பார்த்து சரியாக தேர்ந்தெடுத்து லவ் பண்றதெல்லாம் முடியாதாம். நீங்க பார்த்து நல்ல வரனா தேர்ந்தெடுத்து தீர்மானியுங்க. அப்பாவை எதிர்த்து போராடி நாம ஜெயிக்கலாம்னு சொல்லிட்டா. நீங்க எதிர்பார்த்த மாதிரியே அவள் தன் தேர்வை சரியா உட்கார்ந்து எடை போட்டு பார்த்துட்டா. சுருக்குன்னு விலகிட்டா.”

(’அமுதம்’ ஆகஸ்ட், 2015 இதழில் வெளியானது - அன்புடன் ஒரு நிமிடம் - 120)