Tuesday, March 13, 2018

அவள் - (கவிதைகள்)

461
அடம் பிடிக்கிறது தென்றல்,
நான்தான் இருப்பேன் உன்
மணப்பெண் தோழியாக என்று.
><><

462
தண்மையைப் பொழிவதில்
மழை என்றால்
அன்பைப் பொழிவதில் நீ.
><><

463.
காதல் என்றால்
நிஜத்தில் என்னவென்று எனக்குக்
கற்றுத்தர வந்தவள்.
><><

464
உன்னைப் பார்க்கவோ
விண்ணைவிட்டு
மண்ணிற்கு வந்தது மழை?
><><

465.
மனதில் பட்டிமன்றம்.
வென்றது ’நீ’யா
’உன் அன்பா’?
><><

466
சந்திரனில் போல
எடையிற்று மிதக்கும்
மந்திரம் புரிந்தாய்
என் மீது.
><><

467
வினோதமும் நூதனமுமாக நீ
வியப்பும் தவிப்புமாக நான்.
><><

468
உள்ளம் தொடாது
ஒரு தடவையும் போனதில்லை
உந்தன் புன்னகை.
><><

469
இருபத்து மூன்றை
நீ எடுத்துக் கொண்டு விட
மீதம் ஒரு மணியில் 
நாளைத் தள்ளுகிறேன்.
><><

470
இன்னும் அடங்கவில்லை பிரமிப்பு
நிஜமாகவே என் எதிரில்
நிற்பது நீதானா?
><><

2 comments:

ரிஷபன் said...

இரு வரி இன்பங்கள் !

ஸ்ரீராம். said...

அனைத்தும் அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!